பட்டணத்திலிருந்து ஏறக்குறைய 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அந்தக் கிராமத்தில் மாத்திரம் இரவு சீக்கிரமே இறங்கி விடும்; காரணம் சுற்றிலும் அடர்ந்து நிற்கும் மரங்களும் செடிகளுமே. மாலை ஆறு மணிக்குப் பிறகு தெருக்கள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்படும். ஆங்காங்கே நாய்களின் குரைப்புச் சத்தமும், காற்றில் அசையும் மரக்கிளைகளின் சலசலப்பும் மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கும். மின்விளக்குகள் இல்லாத அந்தக் காலத்தில், இரவு என்றாலே அக்கிராமத்தின் மக்களுக்கு ஒரு வித அச்சம் நெஞ்சிலே தொற்றிக் கொள்ளத் தொடங்கும். இருப்பினும், அந்த இருளுக்கும் அஞ்சாத ஒரு முதியவர் இருந்தார். எழுபது வயதைக் கடந்த அந்த முதியவரை அனைவரும் "தாத்தா" என்றே அழைப்பது வழக்கம். ஒவ்வொரு நாளும் மாலை மயங்கும் வேலையும், அவர் தன் வீட்டின் வாசலில் அமர்ந்து, பழைய பித்தளை விளக்கில் எண்ணெய் ஊற்றி, திரியைச் சரிசெய்து, தீபத்தை எரியவிடுவார். பிறகு அந்த விளக்கை கையில் ஏந்தினவராக மெதுவாக கிராமத்தின் பிரதானத் தெருவில் நடந்து செல்வார். அவரைப் பார்த்தவர்கள் பலரும் வியந்தார்கள். "இந்த வயதில் எதற்காக இந்த சிரமம்?" என்று சிலர் நினைத்தார்க...
தோற்றமும், மாற்றமும் குறிஞ்சிக் குளம், சின்னதோர் கிராமம், இருபுறமும் பக்கவாட்டில் வரிசையாக ஆறு தெருக்கள். இந்த சின்ன கிராமத்திலேதான் குடியிருந்தது செல்லமணியின் குடும்பம். 'ஏபுள்ள இன்னுமா எழும்பல நீ, எவ்வளவு நேரந்தான் படுத்து கிடப்ப, சீக்கிரத்தில எழும்பி வீட்டு வேலயைப் பாக்கப்புடாதா' என்று படுக்கையில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த செல்லமணியை தாய் பூந்தெழிலம்மை கூப்பிட, 'பொறேன்மா, கொஞ்சம் தூங்கிட்டு வர்ரேன், ரொம்ப தூக்கமா வருது' என்று தாயின் காதில் விழும்படியாகப் புலம்பினாள் செல்லமணி. 'வயது இருபது ஆயிற்று, வளர்ந்து ஆளாயிட்ட, புகுந்த வீட்டில போயி உன் மாமியாருகிட்ட இப்படி புலம்ப முடியுமா?' என்று தனக்குள்ளோ சொல்லிக்கொண்டு, தன் வேலையைத் தொடர்ந்தாள் தாய் புந்தெழிலம்மை. 'நான் வடிச்சி கொட்டுற வீட்டுல நீ எப்படியிருந்தாலும் பரவாயில்ல, நீ வடிச்சிக் கொட்டப்போற வீட்டுல உனக்கு உருப்படியா வாழத்தெரிஞ்சா போதும்' என்று தனக்கான கடமை என காலை வேலையை வீட்டில் தொடர்ந்தாள் தாய் பூந்தெழிலம்மை. நாட்கள் ஓட ஓட, சில வருடங்களும் கடந்தது, செல்லமணியின் தோற்றத்துடன் வயதும் 23 என வளர்ந...