Skip to main content

மாறுவேடம்

 

 


அம்மா, ஐயா பிச்சை போடுங்கம்மா, பசிக்குதும்மா' என்ற குரல் அந்தச் சிறுவனின் காதைத் தொடர்ந்து துளைத்துக்கொண்டிருந்தது. காலையில் சாலையில் தந்தை நடைப் பயிற்சி செய்யும்போது, உடன் சென்றிருந்த அவனின் உணர்வுகள் அனைத்தையும் அந்தக் குரல்கள் வருடிக்கொண்டிருந்தன. குதிரைக்கு லாடம் கட்டப்பட்டதுபோல, தந்தை சீராக நேராக மருத்துவர் தந்த விதிமுறைப்படி வீதியில் சுறு சுறுப்பாக தனது பயிற்சியினைச் செய்துகொண்டிருக்க, மகனின் விழிகளோ வீதியில் இடப்புறமும் வலப்புறமும் இருந்த பிச்சைக்காரர்களைப் பார்த்துப் பார்த்து தந்தையோடு சேர்ந்து நடப்பதையும், தந்தையின் வழியினையும் பலமுறை தவறவிட்டுக்கொண்டிருந்தன. ஓரமாய் இருந்த பிச்சைக்காரர்களைப் பார்த்துக்கொண்டே நடந்துகொண்டிருந்ததினால், பலமுறை மகனை உடன் நடந்துவருமாறு ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தார் தந்தை. மகனை உடன் கூட்டிவந்தது பயிற்சிக்குத் தொந்தரவாயிருப்பதாக உணர்ந்து, கோபமடைந்தாலும், செல்லமகனை பாசமாக, 'இந்தா பாரு, அப்பாகூட நீ சரியா நடந்து வரலன்னா, நாளைக்கு உன்ன நான் கூட்டிக்கிட்டு வரமாட்டேன்' என்று எச்சரிப்பு மணி அடித்தார். இந்த மணி ஓசை மகனின் காதை அடைந்தாலும், 'அம்மா, ஐயா, பிச்சை போடுங்கம்மா, பசிக்குதும்மா' என்ற குரல்கள் மீண்டும் அவன் செவிகளை உடைத்துப்போட்டுவிட்டன.

வீட்டிற்கு வந்து இருக்கையில் அமர்ந்திருந்த தந்தையைப் பார்த்து, 'அப்பா, அவங்க ஏன் எல்லார்கிட்டயும் காசு கேக்குறாங்க?' என்று கேட்டபோது, 'அவங்க பிச்சைக்காரங்க' என்று மாத்திரம் தந்தை கொடுத்த பதில் மகனுக்குப் போதுமானதாக இல்லை. தந்தைக்கு உயர்ந்த பதவி, விலையுயர்ந்த கார், மாளிகை போன்ற வீடு என எதற்கும் குறைவற்ற அச்சிறுவனின் மனதில் குறையாய் உறைந்தது இக்கேள்வி. திடீரென நாட்டில் உள்நாட்டுக் கலவரம் வெடித்தது, தீவிரவாதிகள் நாட்டை தாங்கள் ஆளவேண்டும் என்று தீவிரம் காட்டிக்கொண்டிருந்தனர். நாட்டின் பொருளாதாரம் தாறுமாறாகச் சரியச் சரிய, வீட்டின் பொருளாதாரமும் தப்பிப் பிழக்கவில்லை. வீட்டில் சுகமாயிருந்த பலரை இந்நிலை வீதிக்கு இழுத்துவந்தது. செல்வந்தர்களாக வாழ்ந்த பலர் செல்வங்களை இழந்து நின்றனர். உணவுக்கே போராடும் நிலைக்கு உயர்ந்தவர்களும் கூட தள்ளப்பட்டனர். பிழைப்பு தேடி பிற நாடுகளுக்குப் பயணத்தைத் தொடர்ந்தன பல குடும்பங்கள். விற்றுவிடக் கூட வழியின்றி, இருந்த எல்லாவற்றையும் விட்டு விட்டு இச்சிறுவனின் குடும்பமும் தப்பியோட கப்பல் ஏறி வேற்று நாட்டுக்குள் புகுந்தது. புதிய நாடு, கையளவு கூட சொந்தம் என்று சொல்லிக்கொள்ள பூமி இல்லை, வாழ்க்கைக்கும், உணவுக்கும் வருமானம் எங்கிருந்து என்ற கேள்வி அச்சிறுவனின் தந்தையின் நெஞ்சை நிறைத்திருந்தது. சந்திக்கும் நபர்களிடத்திலெல்லாம் உதவி கேட்டு அலைந்துகொண்டிருந்தார் தந்தை. மனதிரங்கிய சிலரிடமிருந்து கிடைத்த பணம், பரந்த மனதுள்ளோரிடத்திலிருந்து வெளிப்பட்ட தயாள குணம், தாகமிஞ்சி நாவரண்டு நிற்கும் மனிதன் வாயில் நீர்ச் சொட்டுக்கள் விழுவதைப் போல அவ்வப்போது தந்தைக்குக் கிடைத்தன. 

அப்பாவுக்கு இத்தகைய மாறுவேடம் வந்தபோது, நடைப்பயிற்சியின்போது தந்தையிடம் கேட்ட கேள்விக்கான விடை அச்சிறுவனுக்குக் கிடைத்தது. பிறர் வீதியில் இருப்பது அவர்கள் விதியல்ல, அது உன் மதியைச் சோதிக்கும் சதி. பரீட்சையில் தேர்ச்சிபெற உன்னுடையதை பங்கிட்டுத்தான் ஆகவேண்டும். பிறருக்குக் கொடுத்துவிட்டுப் போகவேண்டியதை, பையிலே எடுத்துக்கொண்டு போவது நியாயமோ? 'நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே' என்று கானானிய ஸ்திரீ சொன்னபோது, எஜமானாகிய இயேசுவினிடமிருந்து துணிக்கைகள் விழுந்து அவள் மகளை குணமாக்கியதே  (மத் 15:27,28). மேஜையிலிருந்து விழுந் துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருக்கும் லாசருக்களை (லூக். 16:21) மறந்துவிடவேண்டாம். நாம் அப்படிச் செய்தால், பசியாயிருந்தேன்,    எனக்குப்  போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்;  அந்நியனாயிருந்தேன்,  என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்;  வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு  வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன்,  என்னை  விசாரிக்க  வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார் இயேசு. (மத் 25:36)


Comments

Popular posts from this blog

விஷம்

 சிறுகதை www.sinegithan.in இரவு நேரம் குடத்தில இருந்த தண்ணிய கொஞ்சம் சின்ன பாத்திரத்தில சரிச்சி, அணைஞ்சிபோன அடுப்புக்கு மேலே இருந்த சோத்துப் பானையில எஞ்சியிருந்த சோத்துக்குள்ள கொஞ்சமா ஊத்தி, கையால சோத்த தண்ணியோடக் கரச்சி கஞ்சியாக்கிக் குடிச்சிப்புட்டு, ஒண்டிக்கட்டையா தான் வாழும் பனை ஓலை குடில் போன்ற மண்கட்டு வீட்டில, வலக்கையை மடக்கி முடக்கி தலையணையா வச்சிக்கிட்டு, வாழ்ந்த நாள் நினைவுகள் அவ்வப்போது வந்துபோக, முடிந்துபோன தாரத்தின் நாட்கள் முன்னுக்கு வந்து நிற்க, பெற்றெடுத்தப் பிள்ளைகள் தூரத்தில் வாழ்ந்திருக்க அத்தனையையும் நினைத்துக்கொண்டிருந்த முதியவரை தன் மடியில் அள்ளி அணைத்திருந்தது தூக்கம்.   இரவு தன்னை ஆழப்படுத்திக்கொண்டே செல்லச் செல்ல, நள்ளிரவின் உச்சத்தில், எள்ளளவும் தன்நினைவின்றி உலகத்திற்கும் உடலுக்கும் தொடர்பேதுமில்லாதவரைப்போலத் தூங்கிக்கொண்டிருந்தபோது, திடீரென செவிகளில் 'டொம் டொம் டொம்' என்று ஒன்றன் பின் ஒன்றாய்ப் பாத்திரங்கள் வரிசையாகச் சரிந்துவிழுந்துகொண்டேயிருக்கும் சத்தங்கள் கேட்க, சவம்போல் கிடந்த அவர் சட்டென எழுந்து, தன் வீட்டின் அடுப்பங்கறைக்குச் சென்று அங்கும

தோற்றமும், மாற்றமும்

  தோற்றமும், மாற்றமும் குறிஞ்சிக் குளம், சின்னதோர் கிராமம், இருபுறமும் பக்கவாட்டில் வரிசையாக ஆறு தெருக்கள். இந்த சின்ன கிராமத்திலேதான் குடியிருந்தது செல்லமணியின் குடும்பம். 'ஏபுள்ள இன்னுமா எழும்பல நீ, எவ்வளவு நேரந்தான் படுத்து கிடப்ப, சீக்கிரத்தில எழும்பி வீட்டு வேலயைப் பாக்கப்புடாதா' என்று படுக்கையில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த செல்லமணியை தாய் பூந்தெழிலம்மை கூப்பிட, 'பொறேன்மா, கொஞ்சம் தூங்கிட்டு வர்ரேன், ரொம்ப தூக்கமா வருது' என்று தாயின் காதில் விழும்படியாகப் புலம்பினாள் செல்லமணி. 'வயது இருபது ஆயிற்று, வளர்ந்து ஆளாயிட்ட, புகுந்த வீட்டில போயி உன் மாமியாருகிட்ட இப்படி புலம்ப முடியுமா?' என்று தனக்குள்ளோ சொல்லிக்கொண்டு, தன் வேலையைத் தொடர்ந்தாள் தாய் புந்தெழிலம்மை. 'நான் வடிச்சி கொட்டுற வீட்டுல நீ எப்படியிருந்தாலும் பரவாயில்ல, நீ வடிச்சிக் கொட்டப்போற வீட்டுல உனக்கு உருப்படியா வாழத்தெரிஞ்சா போதும்' என்று தனக்கான கடமை என காலை வேலையை வீட்டில் தொடர்ந்தாள் தாய் பூந்தெழிலம்மை.  நாட்கள் ஓட ஓட, சில வருடங்களும் கடந்தது, செல்லமணியின் தோற்றத்துடன் வயதும் 23 என வளர்ந

வசனம் வீணாவதில்லை

 வசனம் வீணாவதில்லை www.sinegithan.in கல்லூரி வகுப்புகள் முடிந்ததும், விடுதியை நோக்கி நடந்துகொண்டிருந்தான் ராகுல்; வீட்டை விட்டு தூரமாயிருந்ததால், வீட்டின் நினைவுகள் அவ்வப்போது அவனை வாட்டியெடுத்தன. ஒருபுறம் வீட்டில் வியாதிப்படுக்கையில் இருக்கும் தாய், மற்றொருபுறம் குடித்துவிட்டு குடும்பத்தினைக் குறித்து கவலையற்று வாழும் தந்தை. வறுமையின் நிமித்தம் உறவினர்களும் தனக்குத் தூரமாயிருக்கும் சூழ்நிலை. நண்பர்களது உதவியுடன் கல்லூரிப் படிப்பினை தொடர்ந்துகொண்டிருந்தான். எனினும், மற்ற மாணவர்களுக்குக் கிடைத்த வாழ்க்;கை, தனக்குக் கிடைக்கவில்லையே என்ற வருத்தம், அவ்வப்போது அவனை 'நீ ஏழை' என்பதை நிறுத்துச் சொல்லிக்கொண்டிந்ததால், 'வாழ்ந்தெதற்கு?' என்ற கேள்வியும் இடையிடையே இதயத்தில் வந்துபோனது. வருத்தங்களை நினைத்து, நினைத்து வீட்டிற்கு வந்துபோவதையும் தவிர்த்துவந்தான் ராகுல். கல்லூரியின் கடைசி ஆண்டு, வீட்டைக்கூட காணாதபடி கண்களை மூடிக்கொண்டு, படிப்பிலேயே மூழ்கியிருந்தான் ராகுல்.  மூன்று ஆண்டுகளுக்குப் பின், காலம் ஒருவழியாக கல்லூரி வளாகத்திலிருந்து தன்னை வெளியேற்ற, வீடு வந்து சேர்ந்தான் ராகுல