Skip to main content

விரக்தி

 





விரக்தி


 இனி வேலையத் தேடுற பொழப்பே வேண்டாம், எத்தன  கம்பனிதான்  ஏறி  ஏறி  இறங்குறது,  ஒருவனும்  மதிக்கமாட்டங்கிறான்  என்று  அலுத்த  மனதுடன்  பூங்கா  ஒன்றில்  படுத்துக்  கிடந்தான்  ரவி.  வேலைக்குப்  போ,  வேலைக்குப்  போன்னு  வீட்டுல   தொல்ல,   அப்பா   அம்பா   தள்ளு   தள்ளுன்னு   தள்ளினாலும்,   வான்னு   கூப்பிட   ஒருவனும் இல்லையே. வீட்டுக்கும் வேலைக்கும் இடையில  ரோட்டுல  காலத்தக்  கடத்துறதுதான்  வாழ்க்கையா?      வேலை      கிடச்சாதான      போகமுடியும்னு  மெல்லப்  பேசினால்கூட,  முழு  வாலிபன்  நீ,  உன்  வாழ்க்கைய  நீ  பார்க்கனும்,  கல்யாணம்  முடிக்கணும்,  மாப்ள  என்ன வேல பார்க்கிறாருன்னு, கையில எவ்வளவு வாங்குறாருன்னு பொண்ணு வீட்டுல கேட்டா, நாங்க என்னடா சொல்லுறது என்று பெற்றோர் அன்றாடம் அவனை எதிர்த்து அவனது  வாயை  மௌனமாக்கிக்கொண்டிருந்தனர்.  உன்  கூட  படிச்சவன்  எல்லாம்  பெரிய  பெரிய  கம்பெனியில  வேலையில  இருக்கானுக,  நீ  மட்டும்  சும்மா  வீட்டில  இருந்தா,  வருங்காலத்துல,  எங்க  காலத்துக்கு  அப்புறம்  உன்  நிலம  என்ன  ஆகும்?  என்ற  கேள்வியின்  அர்த்தங்கள்  அனைத்தும்  அவனுக்கு  விளங்கினாலும்,  அந்தச்  சூழ்நிலையிலிருந்து வெளியே வழியறியாமல், வழிதேடிக்கொண்டேயிருந்தான் ரவி.நண்பர்களுடன் சேர்ந்து எங்காவது சென்றால், செலவு செய்யக்கூட பெற்றோரிடத்தில்தான் பற்று  வைக்கவேண்டும்.  அதிகாரத்தோடு  அப்பா,  அம்மா  என்று  கூப்பிட்ட  வாய்தான்  என்றாலும்,  அதற்கோ  அது  அடங்கிப்போய்க்கிடந்தது.  நண்பர்களே  செலவு  செய்ய,  வாங்கித்  திண்ணும்  வாலிபனாக  வாழுவதை  வெறுத்திருந்த  அவன்,  தனிமையையே  துணை என தெரிந்துகொண்டிருந்தான். அவன் வாழ்க்கையின் திறமைகள் அனைத்தையும், தனிமை  சிறைபிடித்து  வைத்திருந்தது,  பல  திறமைகளின்  சிறகுகளை  தனிமை  ஒடித்துமிருந்தது.  எதிர்கால  வாழ்க்கையையே  எதிரியாகப்  பார்த்துக்கொண்டிருந்தான்.  ஏன் பிறந்தேன்? என்ற கேள்வி அவ்வப்போது தொலைக்காட்சி விளம்பரங்களைப் போல மனத்திரையில் வந்துபோய்க்கொண்டிருந்தது. உறவினர்கள் தனது வீட்டிற்கு வந்தால்கூட, வேலையைப் பற்றியே முதலில் வாய் திறப்பதால், உறவே போதும் என்ற வெறுப்பில், உறவுகளை விட்டும் ஒதுங்கி வாழ்ந்துகொண்டிருந்தான். பட்டப்படிப்பு படித்திருந்தாலும், எங்கே  போவது?  வாழ்க்கையை  எப்படித்  தொடங்குவது?  வீட்டார்  நிர்ப்பந்தத்தினால்  என்ன செய்வது? என்ற அத்தனை கேள்விகளுக்கும் அப்போது அவனிடத்தில் விடைகள் இல்லை. கற்றுக்கொடுத்த ஆசிரியர்களைக் கண்டபோதும், காணாதவனாகவே அவனது கால்கள் திசைமாறிச் சென்றுகொண்டிருந்தன.வெறுப்பில் வீட்டை விட்டே வெளியேறிய அவன்; தன்னோடு கற்ற பாலிய நண்பண் ஒருவனிடத்திற்குச்  சென்று  ஒண்டியிருந்தான்.  பலநாட்களுக்குப்  பின்  பார்த்ததினால்  பாசத்தோடு  வரவேற்ற  நண்பன்கூட,  பலநாள்  அவன்  அவனுடன்  தங்கியிருக்க  தனது  விருப்பத்தைத்  தெரிவித்தபோது,  மறைமுகமாக  பார்வையிலும்,  செயலிலும்  வெறுப்பைத்  தெரிவித்தான்.  நண்பனின்  பாவனைகள்  நட்புக்கு  முற்றுப்புள்ளி  உண்டு  என்னும் அத்தியாயத்தை படித்த அவன், நண்பனின் அறையை விட்டு, வீட்டை நோக்கி புறப்பட்டபோது, வழியில், ஆலயத்தின் வாசற்புற கோட்;டைச் சுவறில், 'நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச்  சகாயம்பண்ணுவேன்;  என்  நீதியின்  வலதுகரத்தினால்  உன்னைத்  தாங்குவேன்'  (ஏசா  41:10)  என்ற  வசனம்,  வேலையைத்  தேடுமுன்  அவனை  இயேசுவைத்  தேடச்  செய்தது. 


Comments

Popular posts from this blog

விஷம்

 சிறுகதை www.sinegithan.in இரவு நேரம் குடத்தில இருந்த தண்ணிய கொஞ்சம் சின்ன பாத்திரத்தில சரிச்சி, அணைஞ்சிபோன அடுப்புக்கு மேலே இருந்த சோத்துப் பானையில எஞ்சியிருந்த சோத்துக்குள்ள கொஞ்சமா ஊத்தி, கையால சோத்த தண்ணியோடக் கரச்சி கஞ்சியாக்கிக் குடிச்சிப்புட்டு, ஒண்டிக்கட்டையா தான் வாழும் பனை ஓலை குடில் போன்ற மண்கட்டு வீட்டில, வலக்கையை மடக்கி முடக்கி தலையணையா வச்சிக்கிட்டு, வாழ்ந்த நாள் நினைவுகள் அவ்வப்போது வந்துபோக, முடிந்துபோன தாரத்தின் நாட்கள் முன்னுக்கு வந்து நிற்க, பெற்றெடுத்தப் பிள்ளைகள் தூரத்தில் வாழ்ந்திருக்க அத்தனையையும் நினைத்துக்கொண்டிருந்த முதியவரை தன் மடியில் அள்ளி அணைத்திருந்தது தூக்கம்.   இரவு தன்னை ஆழப்படுத்திக்கொண்டே செல்லச் செல்ல, நள்ளிரவின் உச்சத்தில், எள்ளளவும் தன்நினைவின்றி உலகத்திற்கும் உடலுக்கும் தொடர்பேதுமில்லாதவரைப்போலத் தூங்கிக்கொண்டிருந்தபோது, திடீரென செவிகளில் 'டொம் டொம் டொம்' என்று ஒன்றன் பின் ஒன்றாய்ப் பாத்திரங்கள் வரிசையாகச் சரிந்துவிழுந்துகொண்டேயிருக்கும் சத்தங்கள் கேட்க, சவம்போல் கிடந்த அவர் சட்டென எழுந்து, தன் வீட்டின் அடுப்பங்கறைக்குச் சென்று அங்கும

தோற்றமும், மாற்றமும்

  தோற்றமும், மாற்றமும் குறிஞ்சிக் குளம், சின்னதோர் கிராமம், இருபுறமும் பக்கவாட்டில் வரிசையாக ஆறு தெருக்கள். இந்த சின்ன கிராமத்திலேதான் குடியிருந்தது செல்லமணியின் குடும்பம். 'ஏபுள்ள இன்னுமா எழும்பல நீ, எவ்வளவு நேரந்தான் படுத்து கிடப்ப, சீக்கிரத்தில எழும்பி வீட்டு வேலயைப் பாக்கப்புடாதா' என்று படுக்கையில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த செல்லமணியை தாய் பூந்தெழிலம்மை கூப்பிட, 'பொறேன்மா, கொஞ்சம் தூங்கிட்டு வர்ரேன், ரொம்ப தூக்கமா வருது' என்று தாயின் காதில் விழும்படியாகப் புலம்பினாள் செல்லமணி. 'வயது இருபது ஆயிற்று, வளர்ந்து ஆளாயிட்ட, புகுந்த வீட்டில போயி உன் மாமியாருகிட்ட இப்படி புலம்ப முடியுமா?' என்று தனக்குள்ளோ சொல்லிக்கொண்டு, தன் வேலையைத் தொடர்ந்தாள் தாய் புந்தெழிலம்மை. 'நான் வடிச்சி கொட்டுற வீட்டுல நீ எப்படியிருந்தாலும் பரவாயில்ல, நீ வடிச்சிக் கொட்டப்போற வீட்டுல உனக்கு உருப்படியா வாழத்தெரிஞ்சா போதும்' என்று தனக்கான கடமை என காலை வேலையை வீட்டில் தொடர்ந்தாள் தாய் பூந்தெழிலம்மை.  நாட்கள் ஓட ஓட, சில வருடங்களும் கடந்தது, செல்லமணியின் தோற்றத்துடன் வயதும் 23 என வளர்ந

வசனம் வீணாவதில்லை

 வசனம் வீணாவதில்லை www.sinegithan.in கல்லூரி வகுப்புகள் முடிந்ததும், விடுதியை நோக்கி நடந்துகொண்டிருந்தான் ராகுல்; வீட்டை விட்டு தூரமாயிருந்ததால், வீட்டின் நினைவுகள் அவ்வப்போது அவனை வாட்டியெடுத்தன. ஒருபுறம் வீட்டில் வியாதிப்படுக்கையில் இருக்கும் தாய், மற்றொருபுறம் குடித்துவிட்டு குடும்பத்தினைக் குறித்து கவலையற்று வாழும் தந்தை. வறுமையின் நிமித்தம் உறவினர்களும் தனக்குத் தூரமாயிருக்கும் சூழ்நிலை. நண்பர்களது உதவியுடன் கல்லூரிப் படிப்பினை தொடர்ந்துகொண்டிருந்தான். எனினும், மற்ற மாணவர்களுக்குக் கிடைத்த வாழ்க்;கை, தனக்குக் கிடைக்கவில்லையே என்ற வருத்தம், அவ்வப்போது அவனை 'நீ ஏழை' என்பதை நிறுத்துச் சொல்லிக்கொண்டிந்ததால், 'வாழ்ந்தெதற்கு?' என்ற கேள்வியும் இடையிடையே இதயத்தில் வந்துபோனது. வருத்தங்களை நினைத்து, நினைத்து வீட்டிற்கு வந்துபோவதையும் தவிர்த்துவந்தான் ராகுல். கல்லூரியின் கடைசி ஆண்டு, வீட்டைக்கூட காணாதபடி கண்களை மூடிக்கொண்டு, படிப்பிலேயே மூழ்கியிருந்தான் ராகுல்.  மூன்று ஆண்டுகளுக்குப் பின், காலம் ஒருவழியாக கல்லூரி வளாகத்திலிருந்து தன்னை வெளியேற்ற, வீடு வந்து சேர்ந்தான் ராகுல